
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் துலுக்கவேலியில் காதல் திருமணம் செய்த தம்பதியை கொன்ற பெண்ணின் சகோதரர், உறவினரை கைது செய்த போலீஸார், இருவரையும் நேற்று திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம், துலுக்கவேலி அய்யாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் மகள் சரண்யா(24), இவர், நர்சிங் படித்து விட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன்(31).
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/myKqHpA
0 Comments