
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை விரைவில் தொடங்க உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கண்ணி அருகே உள்ள தட்டரணை கிராமத்தில் வசித்தவர் தங்கமணி. இவர், சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருந்ததாக, தி.மலை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 26-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மறுநாள் (27-ம் தேதி) பாதிக்கப்பட்டு, தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அன்றிரவு உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PSDG15h
0 Comments