
தஞ்சாவூர்: ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸார் நேற்று பறிமுதல் செய்து, கஞ்சா கடத்திய இளைஞரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வழியாக தஞ்சாவூருக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் எப்.அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என்.கந்தசாமி, எஸ்.கண்ணன், தலைமைக் காவலர் கே.இளையராஜா, காவலர்கள் கே.சுந்தர்ராமன், டி.ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய தஞ்சாவூர் சரக டிஐஜியின் தனிப்படை போலீஸார் நேற்று காலை திருத்துறைப்பூண்டி ரவுண்டானா பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XYV5haw
0 Comments