
கடலூர்: சிதம்பரத்தில் பொதுத் தேர்வு விடைத்தாள் அறை பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுத படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சிதம்பரம் கல்வி மாவட்ட பகுதிகளுக்கான பள்ளிகளின் 10-ம் வகுப்பு அரசுபொது தேர்வுக்கான விடைத்தாள்கள் வைக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆயுதப்படை காவலரான புவனகிரி வட்டம்சேந்திரக் கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பெரியசாமி(26), கடந்த 6-ம் தேதி முதல்பாதுகாப்புப் பணியில் இருந்து வருகிறார். இவருடன் தீயணைப்புத் துறை வீரர் ராஜ்குமார் என்பவரும் பணியில் இருந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iLQmugz
0 Comments