
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் பகுதியில் உள்ளதிருமண மண்டபத்தில் கடந்த 7-ம் தேதி திருமண விழா நடைபெற்றது. அப்போது மணமகள் அறையில் இருந்த 10 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன.
முத்தையாபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த சுமதி (42) என்றபெண்ணை இரவு 10 மணிக்கு மேல் காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீஸார் விசாரித்துஉள்ளனர். அதன்பின் காயங்களுடன் சுமதி தூத்துக்குடி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eBtxICz
0 Comments