Crime

சென்னை: சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ‘பைக் ரேஸ்’ என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து, சட்டம்-ஒழுங்கு போலீஸார், ஆயுதப்படை போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் நேப்பியர் பாலம் முதல் அடையாறு திரு.வி.கா.பாலம் வரையிலும் மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ஜிஎஸ்டி சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Yg3cAXF

Post a Comment

0 Comments