Crime

விழுப்புரம்: இருளர் பெண்கள் நால்வரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறை ஆய்வாளரின் ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த சிலரை கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கு ஒன்றிற்காக திருக்கோவிலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திருக்கோவிலூர் போலீஸார், தி.மண்டபம் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதோடு, விசாரணை என்ற பெயரில் பழங்குடியின இருளர் சமூதாயத்தைச் சேர்ந்த 4 பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zBLSNvp

Post a Comment

0 Comments