Crime

திருவண்ணாமலை: தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு மனு கொடுக்க வரும் பொது மக்களை சோதனையிட்டு கண்காணிக்க, 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், காவல்துறை பாதுகாப்பு வளையத்தை மீறி, மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுக்கும் நிகழ்வு தொடர்கிறது.

இதுநாள் வரை மண்ணெண்ணெய் மட்டும் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில், 70 வயது மூதாட்டி தனலட்சுமி என்பவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ECiIg62

Post a Comment

0 Comments