
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகவும், கணித ஆசிரியராகவும் துளசிராமன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 3 மாதங்களாக இப்பள்ளியில் பயிலும் சில சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது. பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AJBfXnw
0 Comments