
சேலம்: பெங்களூருவுக்கு ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட போதைப் பொருட்கள் கலந்த சாக்லெட் மற்றும் கஞ்சா பொட்டலத்தை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்து, ஒடிசா இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தை கடந்து செல்லும் ரயில்களில் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் மேற்பார்வையில், ரயில்வே காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்ற ஹவுரா விரைவு ரயிலில் சோதனையிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r6Oewnf
0 Comments