Crime

சென்னை: தாம்பரம் - புழல் புறவழிச் சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் கடந்த ஏப்.10-ம் தேதியன்று, பைக்கில் சென்றவரை தாக்கி ரூ.82 லட்ச ரூபாய் பணம் வழிப்பறி செய்த வழக்கில் தனியார் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீஸார், கொள்ளையர்களிடமிருந்து ரூ.72 லட்சத்தை மீட்டுள்ளனர்.

ரூ.82 லட்சம் வழிப்பறி: சென்னை மாதவரம் பால்பண்ணை படவட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் விஜயகுமார் தனது நிறுவனத்திலிருந்து ரூ.82 லட்சம் பணத்தை பெரிய பையில் எடுத்து கொண்டு கடந்த ஏப்.10-ம் தேதியன்று, பைக்கில் கொடுங்கையூரில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு சென்றார்.இவர் தாம்பரம் - புழல் புறவழிச் சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இவரது பைக்கைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த 3 பேர் வழிமறித்து உள்ளனர். பின்னர் இவரைத் தாக்கி இவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அவர்கள் வந்த பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். படுகாயமடைந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jZpT1of

Post a Comment

0 Comments