Crime

பெருந்துறை மின்வாரிய அலுவலரிடம் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவது போல் பேசி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.18 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் பாபு (42). இவர் பெருந்துறை கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் துணை வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கிரெடிட் கார்டு முடக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அவர் இணையதளத்தில் இருந்த வாடிக்கையாளர் சேவைமைய நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கிரெடிட் கார்டு மீண்டும் செயல்பட ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XgzdxOf

Post a Comment

0 Comments