
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கார்த்தி (31). கேரள மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர் கரோனா சூழலால் சொந்த ஊரில் இருந்தபடி பணியாற்றி வருகிறார்.
சமூக ஊடகம் ஒன்றின் வழியாக சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு அறிமுகம் ஆன நபர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும், கார்த்தி பணியாற்றும் துறை தொடர்பான புராஜக்ட் ஒன்றை அவருக்கு வழங்க விரும்புவதாக தெரிவித்த அந்த நபர் கார்த்தியின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vftlOIX
0 Comments