
நெய்வேலி அருகிலுள்ள பெரிய கண்ணாடி காலனியைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி (25). டிப்ளமோ படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். கடந்த 17-3-2020 அன்று அந்த சிறுமியை திருச்சிக்கு கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர், அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சூரியமூர்த் தியை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x69wNyT
0 Comments