
திருநெல்வேலி/ஒட்டன்சத்திரம்: தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி என 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நீராவி முருகன் திருநெல்வேலி அருகே போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி தாக்கியதில் உதவி ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நீராவி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (42). 1999-ல் தூத்துக்குடி, 2009-ல் திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் மற்றும் 2011-ல் தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்குகள், தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்கள், ஆள் கடத்தல், சென்னை உட்பட பல இடங்களில் வழிப்பறி என, 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நகைக் கொள்ளையில் இவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UOZVLfY
0 Comments