Crime

தருமபுரி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த சிட்லகாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (25). இவர் அப்பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். அருகில் வசிப்பவர் செல்வம் மகன் ரஞ்சித் (22). குணசேகரனின் வீடு மற்றும் கடையை ஒட்டி ரஞ்சித் வீடு கட்டும் பணி மேற்கொண்டு வருகிறார். இப்பணியின் போது கட்டுமானப் பொருட்கள் விழுந்து குணசேகரனின் வீட்டு மேற்கூரை சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக குணசேகரனின் தந்தை முனுசாமிக்கும், ரஞ்சித்துக்கும் இடையே நேற்று முன் தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரும்புக் கம்பியால் ரஞ்சித் தாக்கியதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி அறிந்தகுணசேகரன் கண்ணாடியால் குத்தியதில் பலத்த காயங்களுடன் ரஞ்சித் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர் பாக பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lmu8KfZ

Post a Comment

0 Comments