Crime

வேலூர்: வேலூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் சாரதிமாளிகை, பஜார், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோனது. இதனால், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையம், தெற்கு காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வந்த 2 பேரை மடக்கி நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nHMq6a

Post a Comment

0 Comments