Crime

நாட்றாம்பள்ளி/லத்தேரி: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி ஏரியில் இருந்து தினசரி மொரம்பு மண் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது.

அதன்பேரில், நாட்றாம்பள்ளி காவல் துறையினர் ஏரியில் சோதனை நடத்தியபோது அதேபகுதியைச் சேர்ந்த விஜயன் (40), குமார் (23) ஆகிய 2 பேரும் ஏரியில் இருந்து திருட்டுத்தனமாக மொரம்பு மண் கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் பொக்லைனை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qLFuHb

Post a Comment

0 Comments