
திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி கிடப்பதாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த பெண்ணை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nwovGM
0 Comments