
பேரணாம்பட்டு அருகே அனுமதி யின்றி நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குடியாத்தம் தொகுதி செயலாளர் உட்பட 4 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
பேரணாம்பட்டு அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு சந்துரு (19), முனிசாமி (17), கணேசா(13) என 3 மகன்கள் உள்ளனர். இதில், கணேசா அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fw92C6
0 Comments