
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் குத்தகைக்கு எடுத்ததில் முன்விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராகேஷ்குமார் (26). இவர் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிகுளத்தில் மீன் குத்தகைக்கு எடுத்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு குளக்கரையில் அமர்ந்து காவல் காத்துக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த சிலர், ராகேஷ்குமாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். உடன் இருந்த நண்பர்கள் ராகேஷ் குமாரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராகேஷ்குமார் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sW579I
0 Comments