
மதுராந்தகம்: நண்பர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்திட்ட விவசாயியை பணம் செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனம் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், மன உளைச்சலில் மயங்கி விழுந்து உயிரிழந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த புத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி நீலமேகம்(62). இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதன்பேரில், கடந்த 2017-ம் ஆண்டு அச்சிறுப்பாக்கத்தில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தின் பைனான்ஸ் மூலம் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் ஆகிய வாகனங்களை மாதத் தவணையில் ரவி வாங்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pQJYvt
0 Comments