Crime

மும்பை: முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் அவர்களுக்குத் தெரியாமல் பதிவிட்டு, அவர்களை ஏலமிடும் 'புல்லிபாய்' செயலி குறித்த புகாரில் பெங்களூரைச் சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மாணவரின் வயது, படிப்பு ஆகியவற்றைக் காரணம்காட்டி பெயர், அடையாளங்களை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.

முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு, அவர்களை ஏலம் விடும் 'புல்லிபாய்' ஆப்ஸ் குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸிலும், டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர், டெல்லி போலீஸிலும் புகார் செய்திருந்தனர். இரு நகரங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mTkr32

Post a Comment

0 Comments