Crime

தேனி அருகே உப்புக் கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டிபாபு. இவரது மனைவி இந்துராணி (22). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்துராணி மீண்டும் கர்ப்பம் ஆனார். 3 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் தேனி அரண்மனைப் புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

சிசுவின் வளர்ச்சி குறைவாக இருந்ததால் கருவைக் கலைத்துவிடும்படி மருத்துவர் தெரிவித்துள்ளார். இதன்படி கருக்கலைப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இவரது உடல்நிலை மோசமானதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இந்துராணி வழியிலே இறந்து விட்டதாகக் கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pQ9Vv4

Post a Comment

0 Comments