
சென்னை: சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரைக் கட்டிப்போட்டு மர்ம நபர்கள் 1.32 லட்சம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் பணிபுரிந்து வருபவர் டீக்காராம் மீனா. நேற்று இரவு அவர் இங்கு பணியில் இருந்தார். பயணிகளுக்கு முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட்டுகளை வழங்கிக் கொண்டிருந்தார். பயணிகள் யாரும் அற்ற நேரத்தில் அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கவுன்ட்டருக்கு வந்து அவரைக் கட்டிப்போட்டுவிட்டு. 1,32,500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34l9ssR
0 Comments