
கோவையிலிருந்து ரூ.21 லட்சம் பணம், 22 பவுன் நகையுடன் காணாமல்போன 2 மாணவர்கள் திருச்சியில் மீட்கப்பட்டனர். அவர் கள் எடுத்து வந்த நகைகள், பணத்தை வழிப்பறி செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை போத்தனூர் பகுதி யைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டிலிருந்த 22 பவுன் நகைகள், ரூ.21 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு நண்பருடன் கடந்த 31-ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போனார். இதுகுறித்த புகாரின்பேரில், போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31mP7SK
0 Comments