Crime

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் குத்தகை எடுப்பது தொடர்பாக இருந்துவந்த முன்விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு இளைஞரைக் கொலை செய்த நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராகேஷ்குமார் (26). இவர், மேற்கு மரியநாதபுரத்தில் உள்ள செட்டிகுளக்கரையில் இரவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் ராகேஷ்குமாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். உடன் இருந்த நண்பர்கள் ராகேஷ்குமாரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே ராகேஷ்குமார் உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34gLuyO

Post a Comment

0 Comments