
சென்னை: வீடுகளை குத்தகைக்கு விடுவதாகக் கூறி, ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் மோசடி செய்த வழக்கில், 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (62). இவரது மனைவி லதா மணி (58). இவர்கள் சென்னை, கொளத்தூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள பிளாட்டுகளை குத்தகைக்கு விடுவதாகக் கூறி, 2009-ல் ரூ.13.35 லட்சம் பெற்று, மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/33Jm7Fr
0 Comments