Crime

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. இதில் 14வயதான 3-வது மகள் தனதுசகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மிரட்டி பாலியல்வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் கடந்த பிப்.19-ம் தேதி புகார் செய்துள்ளனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியா, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wRP7F6

Post a Comment

0 Comments