
சென்னை அண்ணா நகரில்உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றுபவர் சரவணன் (31). இவர் கடந்த 12-ம் தேதி மதியம் 2.45 மணி அளவில் தனது நிறுவன அதிகாரிகள் கொடுத்தனுப்பிய ரூ.40 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை (சவுதி ரியால்) தியாகராய நகர், தெற்கு போக் சாலையில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.
தெற்கு போக் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி அருகே சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, சாலையோரத்தில் மயங்கிவிழுந்துள்ளார். இதை பார்த்து, அருகே இருந்தவர்கள் ஓடிவந்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3thdOIW
0 Comments