
சேலத்தில் 7 வயதுச் சிறுமியை ரூ.10 லட்சத்துக்கு தொழிலதிபருக்கு விற்பனை செய்ததாக சிறுமியின் பாட்டி அளித்த புகாரில், தாய்- தந்தை மற்றும் தொழிலதிபரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி, டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு தனது பேத்தியை தொழிலதிபர் ஒருவரிடம் பெற்றோரே விற்பனை செய்ததாகப் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரில், எனது மகள் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் வேலை பார்த்து வருகிறார். மகள் பணத்துக்காக எனது ஏழு வயதுப் பேத்தியை தொழிலதிபரிடம் கொடுத்துவிட்டார். உடனடியாக எனது பேத்தியை மீட்டு ஒப்படைக்க வேண்டும்,’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wQyjyg
0 Comments