Crime

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே குடும்ப தகராறில் தம்பதி காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விஷம் கொடுக்கப்பட்டு உயிர் தப்பிய குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் புங்கவாடி கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் வேல்முருகன் (37). இவரது மனைவி சத்யா (33). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் இருந்தனர். வேல்முருகனின் தாயார் தனலட்சுமிக்கும், சத்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. வழக்கம் போல நேற்று (பிப். 9) மாமியார் - மருமகளுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு ஆதரவாக வேல்முருகன் தனது தாய் தனலட்சுமியை தட்டி கேட்டுள்ளார். அவரையும் தனலட்சுமி தரக்குறைவாக பேசியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rDLIpT

Post a Comment

0 Comments