
சென்னை தாம்பரம்-பைபாஸ் சாலையில் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மருத்துவப் பேராசிரியையின் வாகனம் சாலையில் சறுக்கி விழுந்ததில், மூடப்படாத மழைநீர் வடிகாலில் விழுந்த தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர்.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்தவர் கரோலின் பிரிசில்லா (45). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் இவாலின் (22). கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை தனது மகளுடன் கரோலின் தனது இருசக்கர வாகனத்தில் கரோலின் சென்றுள்ளார். ஷாப்பிங் முடிந்து இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2IlHrGK
0 Comments