
கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த பிள்ளமநாயக்கர் கூடலூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(32). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி இரவு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை தனது உறவினர்கள் உதவியுடன் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார்.
இதுகுறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார், ஜெயராஜ் உட்பட 13 பேரை கைது செய்தனர். கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2HzX1Os
0 Comments