Crime

சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் இவருக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இருதயராஜுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வங்கியில் இருந்து பேசுவதாகவும், பழைய கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு, புதிய கார்டு கொடுப்பதாகவும் கூறி உள்ளனர். கார்டு பற்றிய விபரங்களை கேட்க அவரும் தெரிவித்துள்ளார். திடீரென அவரது கிரெடிட் கார்டில் இருந்து ஒரே நேரத்தில் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸில் இருதயராஜ் புகார் அளித்தார். இருதயராஜ் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் எண்களை வைத்து போலீஸார் விசாரித்தனர். இதில், கோயம்பேட்டைச் சேர்ந்த 28 வயதான மென் பொறியாளர் கார்த்திகேயன் என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2H0aqz2

Post a Comment

0 Comments