
வீடுகளுக்குள் புகுந்து காலணிகளை திருடி விற்பனை செய்யும் கும்பல் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளை வெங்கடாசலம் தெருவில் வசித்து வரும் சந்தானம் என்பவரது வீட்டில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், வீட்டின் வாசல்படி அருகே ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த 3 ஜோடி புதிய காலணிகள் காணாமல் போயுள்ளன. வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர், பட்டப்பகலில் இவரது வீட்டு வாசலில் உள்ள காலணிகளை திருடி பாலித்தீன் பைகளில் போட்டு எடுத்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30UMZ11
0 Comments