
ஆன்லைன் டிரேடிங் மூலம் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக் (36). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த வாட்ஸ்-அப் எண்ணைத் தொடர்பு கொண்டு ஒரு குழுவில் இணைந்தார். பின்னர், அந்த குழுவில் வந்த ‘லிங்க்’ மூலமாக, டிரேடிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அப்போது, அதில், முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக லாபம் கிடக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு கார்த்திக் ரூ.1.43 கோடி செலுத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V7Y3GvD
0 Comments