Crime

சென்னை: டிஜிபி அலு​வல​கம் அருகே பைக்​கில் சென்று கொண்​டிருந்​த தம்​ப​தி​யைத் தாக்கி வழிப்​பறி​யில் ஈடு​பட்ட, கொள்​ளை​யன் கைது செய்யப்பட்டார். பழைய வண்​ணாரப்​பேட்​டை, நல்​லப்ப வாத்​தி​யார் தெரு​வைச் சேர்ந்​தவர் பாஸ்​கர் (55). இவர் கடந்த 9-ம் தேதி மனைவி மலர்க் ​கொடி (53) மற்​றும் மகளு​டன் ராயப்​பேட்​டை​யில் உள்ள ஓட்​டல் ஒன்​றுக்கு சென்று உணவருந்​தி​னார்.

பின்​னர் மகளை அங்​கேயே விட்​டு​விட்​டு, மனை​வி​யுடன், பாஸ்​கர் வீட்டுக்கு புறப்​பட்​டார். டிஜிபி அலு​வல​கம் அருகே காம​ராஜர் சாலை, ராணி மேரி கல்​லூரி எதிரே பைக் சென்​ற​போது, மற்​றொரு பைக்​கில் வந்த நபர் பாஸ்​கரின் மனைவி மலர்க்​கொடி தோளில் மாட்​டி​யிருந்த கைப்​பையை பறித்​து, இரு​வரை​யும் கீழே தள்​ளி​விட்டு தப்​பி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wac0mVj

Post a Comment

0 Comments