
சென்னை: டிஜிபி அலுவலகம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதியைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட, கொள்ளையன் கைது செய்யப்பட்டார். பழைய வண்ணாரப்பேட்டை, நல்லப்ப வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (55). இவர் கடந்த 9-ம் தேதி மனைவி மலர்க் கொடி (53) மற்றும் மகளுடன் ராயப்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்று உணவருந்தினார்.
பின்னர் மகளை அங்கேயே விட்டுவிட்டு, மனைவியுடன், பாஸ்கர் வீட்டுக்கு புறப்பட்டார். டிஜிபி அலுவலகம் அருகே காமராஜர் சாலை, ராணி மேரி கல்லூரி எதிரே பைக் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த நபர் பாஸ்கரின் மனைவி மலர்க்கொடி தோளில் மாட்டியிருந்த கைப்பையை பறித்து, இருவரையும் கீழே தள்ளிவிட்டு தப்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wac0mVj
0 Comments