Crime

ஓசூர்: கர்​நாடகா மாநில தொழில​திபரை கடத்​திக் கொலை செய்​து, அவரது உடலை தமிழக எல்​லை​யில் வீசிச் சென்​றவரை அம்​மாநில போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தனர். கர்​நாடக மாநிலம் பொம்​மசந்​திரம் அரு​கே​யுள்ள கித்​தனஹள்ளி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மாதேஷ். இவரை கடந்த 4-ம் தேதி மர்ம நபர்​கள் கடத்​தி சென்று கொலை செய்​தனர். இது தொடர்​பாக ஹெப்​ப கோடி போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர்.

இந்​நிலை​யில், கடந்த 6-ம் தேதி அதே பகு​தி​யைச் சேர்ந்த தொழில​திபர் பாலப்பா ரெட்டி என்​பவரை ஜிகினி உள்​வட்ட சாலை​யில் சிலர் காரில் கடத்​திச் சென்​று, அவரது குடும்​பத்​தினரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்​டினர்​.இது தொடர்​பாக அவரது குடும்​பத்​தினர் போலீ​ஸில் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், பொம்​மசந்​தி​ராவைச் சேர்ந்த ரவி பிர​சாத் ரெட்டி என்​பவர் மாதேஷ் மற்​றும் பாலப்​பாரெட்டி ஆகியோரை பணத்​துக்​காக கடத்​திச் சென்று கொலை செய்​தது தெரிய​வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NQslwMf

Post a Comment

0 Comments