Crime

சென்னை: லேப்-டாப் வியாபாரியிடம், போலீஸ் எனக் கூறி, ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்​னை, ரிச்சி தெரு​வில் நரேஷ்கு​மார் (38) என்​பவர் லேப்​-​டாப் உதிரி பாகங்​கள் விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார்.

இவர் கடந்த அக். 3-ம் தேதி இரவு, அவரது நண்​பருக்கு சொந்​த​மான ரூ.55 லட்​சம் பணத்தை வங்​கி​யில் டெபாசிட் செய்​வதற்​காக இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார். அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாக​னங்களில் வந்த சிலர் நரேஷ்கு​மாரை வழிமறித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JmhqkyL

Post a Comment

0 Comments