
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் பெரிய கோயில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி பொதுமக்களுடன் சேர்ந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், ‘யாரை நம்புவதோ!’ என பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயிலில் திங்கள் கிழமை இரவு நடந்த கொள்ளை சம்பவத்தில் காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரநாராயணன் ஆகிய இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fLi2Gbj
0 Comments