
ஓசூர்: கெலமங்கலம் அருகே தனியார் தொழிற்சாலை பெண்கள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் கைதான வடமாநிலப் பெண், தவறான தகவலைக் கொடுத்து தனது ஆண் நண்பரை தப்ப வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவானவரை தேடி போலீஸார் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நாகமங்கலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக லாளிக்கல் பகுதியில் விடுதி உள்ளது. இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி விடுதியில் உள்ள ஒரு அறையின் குளியல் அறையில் ஒடிசாவைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா(22) என்ற பெண் தொழிலாளி ரகசிய கேமரா பொருத்தியது தெரிய வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T0tGBIw
0 Comments