
சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் மூதாட்டி, இளைஞர் உயிரிழந்தனர். தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் கணேஷ் குமார் (47). இவர் இருசக்கர வாகனத்தில் ஆயிரம் விளக்கிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி அண்ணா சாலை வழியாக நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அண்ணா மேம்பாலத்திலிருந்து இறங்கும்போது, திடீரென அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கணேஷ் குமார் பலத்த காயமடைந்தார். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கணேஷ் குமாரை மீட்டுஅருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் அங்கேயே இறந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xWKDalo
0 Comments