Crime

சென்னை: சென்​னை​யில் இரு​வேறு இடங்​களில் நிகழ்ந்த விபத்தில் மூதாட்​டி, இளைஞர் உயி​ரிழந்​தனர். தேனாம்​பேட்​டையைச் சேர்ந்​தவர் கணேஷ் குமார் (47). இவர் இருசக்கர வாக​னத்​தில் ஆயிரம்​ விளக்​கி​லிருந்து தேனாம்​பேட்டை நோக்கி அண்ணா சாலை வழி​யாக நேற்று முன்​தினம் சென்று கொண்​டிருந்​தார். அண்ணா மேம்​பாலத்​திலிருந்து இறங்​கும்​போது, திடீரென அவரது வாகனம் கட்​டுப்​பாட்டை இழந்​து, அங்​கிருந்த பாலத்​தின் தடுப்​புச் சுவரில் மோதி​யது.

இந்த விபத்​தில் இருசக்கர வாக​னத்​திலிருந்து நிலை தடு​மாறி கீழே விழுந்த கணேஷ் குமார் பலத்த காயமடைந்​தார். அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் கணேஷ் குமாரை மீட்டுஅரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்ல முயன்​றனர். ஆனால் அவர் அங்​கேயே இறந்​தது தெரிய​வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xWKDalo

Post a Comment

0 Comments