
சென்னை: வேளச்சேரியைச் சேர்ந்தவர் சுரூபா ராணி சிவக்குமார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசிக்கிறார். இவர் தனது ரூ.25 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் மற்றும் ரூ.21 லட்சம் ரொக்கத்தை வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் லாக்கரில் வைத்திருத்தார்.
இதை அவர் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. லாக்கரை அணுகும் உரிமையை சென்னையில் வசிக்கும் தனது தாயிடம் ஒப்படைத்திருந்தார். இந்நிலையில், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் மாயமானது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சுரூபா ராணி, தனது சகோதரர் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/waXpfZo
0 Comments