Crime

ஓசூர்: ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் சரக்கு லாரி, இரண்டு கார்கள், பிக்கப் வேன், கண்டெய்னர் லாரி, ஈச்சர் லாரி என 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் பகுதியில் பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது விபத்துக்கள் நடந்து வருகின்றன. இன்று அதிகாலை 3 மணி அளவில் பேரண்டப்பள்ளி பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றுள்ளன. அப்போது சரக்கு லாரி ஒன்று, முன்னாள் சென்ற கார் மீது மோதியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/liE8FmV

Post a Comment

0 Comments