
பண்ருட்டி அருகே பட்டாசு வெடித்ததைக் தட்டிக் கேட்டவரை கொலை செய்ததாக இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியும் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட செம்மேடு கிராமத்தில், கலியமூர்த்தி மகன் வேலு(24) என்பவர் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடித்துள்ளார். அப்போது பட்டாசு பக்கத்து வீட்டில் விழுந்துள்ளது. இதில் சூரியமூர்த்தி என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து ஓடியுள்ளது. இதையடுத்து சூரியமூர்த்தி, பட்டாசு சற்றுத் தள்ளி வெடிக்கச் செய்யலாமே என கேள்வி எழுப்பியதால், வேலு தரப்புக்கும்,சூரியமூர்த்தி தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ome8IET
0 Comments