
சென்னை: இருசக்கர வாகனத்தை திருடி அதில் சென்று திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். புழல் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் சிதம்பரம் (23). இவரது விலை உயர்ந்த பைக் கடந்த 19-ம் தேதி திருடுபோனது.
இதுகுறித்து புழல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பைக் திருட்டில் ஈடுபட்டது ஐயப்பன்தாங்கல் தண்டலம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற சூர்யமூர்த்தி (19), செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற காரைக்கால் மணி (20) என்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pL2qIex
0 Comments