
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜீப் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், டிஎஸ்பி, ஓட்டுநர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை, பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் 191 பேருக்கு 61 குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை டிஎஸ்பி குமரன் (35) அரசு ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZvBOVjI
0 Comments