
மதுரை: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை பாலத்தில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்தது தொடர்பான வழக்கில் தென்காசி ஹனீபா குற்றவாளி என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்தது.
2011-ல் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தமிழகத்தில் ரதயாத்திரை மேற்கொண்டபோது மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி அருகேயுள்ள பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்து, அவரைக் கொல்ல முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில் முகமது ஹனீபா என்ற தென்காசி ஹனீபா உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gDzN0kR
0 Comments