
சென்னை: போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் கடந்தமே மாதம் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, அதிமுக நிர்வாகி பிரசாத், நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
பிரசாத்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சினிமா நடிகர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் (எ) பிரிட்டோ), மேற்கு ஆப்பரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆகியோரை ஜூன் 17-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G9mjNdZ
0 Comments